
தமிழ் சமூகம் மிகவும் தொன்மையான சமூகம் இன்று அறிவியல் வளர்ச்சியில் நாம் மிகவும் முன்னேறிக் கொண்டிருக்கிறோம் ஆனால் பழந்தமிழ் மக்கள் நாம் ஆச்சரியமூட்டும் அளவுக்கான நுட்பமான அறிவியல் அறிவை பெற்றிருந்தனர். மனிதனின் வாழ்வியல் தேவைகள் புதிய புதிய தொழில்நுட்பங்களைக் கண்டுபிடிக்கவும் வளர்த்தெடுக்கவும் உதவின. வேளாண் தொழில்நுட்பம், உழவு நுட்பங்கள், சுழற்சி வேளாண்மை, நெசவுத் தொழில்நுட்பம், கட்டடத் தொழில்நுட்பம், நீர் மேலாண்மை, எந்திரங்களை பயன்படுத்தும் முறை, விலங்குகளின் தோலினை பதப்படுத்தி பயன்படுத்தும் அறிவு என பல்துறை அறிவு பெற்றவர்களாக விளங்கினர்.
